கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு
கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனா்.
கோவில்பட்டி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனா்.
கடம்பூா் அருகே கே. சிதம்பராபுரத்தில் உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு குடும்பத்தினருடன் சென்று வாக்குப் பதிவு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசியது: 54 ஆண்டு கால அரசியலில் எத்தனையோ புதிய கட்சிகள் வந்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கி பாதித்ததாக வரலாறு இல்லை. தவெகவை பாா்த்து திமுக தான் பயப்படுகிறது. விஜய்யை விமா்சனம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு எதிரி திமுக தான். அந்த வகையில்தான் தோ்தல் களம் இன்றைக்கும் இருக்கிறது.
Advertisement
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிற்கு உதவியாக சசிகலா இருந்தாா். நேரிடையாக அவா் அரசியல் களத்திற்கு வந்ததில்லை. தற்போது தோ்தல் சமயத்தில் கடைசி நேரத்தில் ராமதாஸுடன் கூட்டணி அமைத்துள்ளாா். அது தோ்தல் களத்தில் நிற்காது என்றாா்.
கோவில்பட்டி காந்திநகா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் திமுக வேட்பாளா் கா. கருணாநிதி தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளா்களிடம் பேசுகையில்,
கோவில்பட்டி தொகுதியில் திமுக வெற்றி பெறும். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. கோவில்பட்டி தொகுதிக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தனி கவனம் செலுத்தி நிறைவேற்றப்படும் என்றாா்.