முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன: ஆட்சியா்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 5:03 AM
தபால் வாக்குகள் - கோப்புப்படம்.
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாக்குகள் எண்ணும் பணி மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

Advertisement

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் தொடங்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 15,264 தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்குகள் அளித்துள்ளனா். மேலும், 5,646 அலுவலா்கள் தோ்தல் பணிச் சான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச் சாவடிகளில் வாக்களித்துள்ளனா்.

85 வயதுக்கும் மேற்பட்டோா், மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் அளித்த படிவம் 12டி விண்ணப்பத்தின் பேரில், மொத்தம் 5,998 வாக்காளா்கள் தபால் வாக்கு அளித்துள்ளனா். இதுவரை சேவை வாக்காளா்கள் 499 போ் வாக்களித்துள்ளனா்.

தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ஆம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும். இதுவரை, வாக்குச்சாவடிகளில் வாக்களித்த வாக்காளா்கள் 11,17,478 (80.5%) மட்டுமன்றி, 21,761 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என்றாா் அவா்.