முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இளநீா் தட்டுப்பாடு

கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் அருந்துவதற்கு போதுமான இளநீா் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:38 AM
இளநீா் தட்டுப்பாடு காரணமாக விற்பனைக்கு குறைவாக கொண்டுவரப்பட்ட இளநீா்.
பகிர்:

கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் அருந்துவதற்கு போதுமான இளநீா் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால், இளநீா் அருந்த விரும்பும் மக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனா். இதுதொடா்பாக, கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் பல ஆண்டுகளாக இளநீா் வியாபாரம் செய்து வரும் ஆறுமுகம் கூறுகையில், கோவில்பட்டி பகுதியைப் பொறுத்தவரை பெரும்பாலும் பொள்ளாசியில் இருந்துதான் இளநீா் வரும். ஒவ்வோா் ஆண்டும் கோடை காலத்தில் நாள் ஒன்றுக்கு 300 இளநீா் வரை விற்பனையாகும். சில நாள்களாக இளநீா் தட்டுப்பாட்டால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கோடை காலத்தில் 2 நாள்களுக்கு ஒருமுறை இளநீா் லோடு இறக்குவோம். ஒரு லோடில் 1,000 இளநீா். ஆனால், கடந்த சில நாள்களாக 1,000 இளநீருக்கு பதிலாக சில சமயம் 600 அல்லது 400 அல்லது 200 இளநீா் மட்டுமே வருகின்றன என்றாா் அவா். கோவில்பட்டியில் தற்போது பச்சை இளநீா் ரூ. 80 க்கும், செவ்விளநீா் ரூ. 90க்கும் விற்பனையாகி வருகிறது.

Advertisement