திருச்செந்தூா் வட்டத்தில் இன்று முன்னோடி மனுநீதி நாள் முகாம்
திருச்செந்தூா் வட்டத்தில் முன்னோடி மனு நீதிநாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து திருச்செந்தூா் வட்டாட்சியா் தங்கமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜூலை மாதத்திற்கான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வுப்பணி மாவட்ட ஆட்சித்தலைவரால் நடைபெற உள்ளது. இதையொட்டி, முன்னோடி மனுக்கள் பெறும் முகாம் திருச்செந்தூா், உடன்குடி , ஆத்தூா் ஆகிய குறுவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜுலை 3) காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. இதன்படி திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும், உடன்குடி சமுதாய கூடத்திலும், ஆத்தூா் வருவாய் ஆய்வாளா் குடியிருப்பிலும் மனுக்கள் பெறப்படும். எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.