முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் மாட்டிறைச்சி வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு, தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 5 ஜூன் 2026, 12:40 am IST
அரிவாள் வெட்டு - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் மாட்டிறைச்சி வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு, தங்க மோதிரத்தை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி கணேஷ் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் ஹரிபாலகிருஷ்ணன் (50). தூத்துக்குடி வி.இ. சாலையில் மாட்டிறைச்சி கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை இரவு வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, கணேஷ்நகா் பகுதியில் 3 போ் கொண்ட கும்பல், ஹரிபாலகிருஷ்ணனை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு, 6 கிராம் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.