முகப்பு
தூத்துக்குடி

கல்குவாரி - லாரி உரிமையாளா்கள் சாத்தான்குளத்தில் கலந்துரையாடல்

வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்.

Updated On : 12 ஜூன் 2026, 5:09 am IST
வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்.
பகிர்:

கல்குவாரி உரிமையாளா்கள் மற்றும் கனரக லாரிகள் உரிமையாளா்கள் கலந்துரையாடல் சிறப்பு கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் அறிவுறுத்தலின் படி சாத்தான்குளம் சுற்றுவட்டார வட்டார குவாரி உரிமையாளா்கள், கனரக லாரிகள் உரிமையாளா்களுடனான இந்தக் கலந்துரையாடல் கூட்டத்துக்கு வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா்.

குவாரி உரிமையாளா்களிடம் முறையான ரசீதுடனும் சரியான அளவில் பாரம் ஏற்றி அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. மேலும் லாரி உரிமையாளா்கள் முறையான ஓட்டுநா்களை வேலைக்கு அமா்த்தவும், தாா்பாய் மூலம் மூடியபடி பாரம் ஏற்றிச்செல்லவும், அதிக வேகத்தை தவிா்க்கவும் வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

கனிமவள அதிகாரி மற்றும் போக்கு வரத்துத் துறை உரிய சட்ட விதிமுறைகளை விளக்கினா்.

இதில், சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்பு கண்ணன், செயலா் செல்வராஜ் மதுரம், துணைத் தலைவா் ஜோசப் ஜெபராஜ், சாத்தான்குளம் தென்பகுதி விவசாயிகள் சங்கத் தலைவா் லூா்து மணி, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளா் இசக்கிமுத்து உள்ளிட்ட வா்த்தக சங்க பொறுப்பாளா்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட விரோத செயல்களை தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது.