‘சமூக சேவகா் விருது பெற விண்ணப்பிக்கலாம்’
பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்துக்கு விருது வழங்கப்படவுள்ளது.
பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்துக்கு விருது வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுதந்திர தின விழாவின் போது, பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா், தொண்டு நிறுவனத்துக்கு விருது வழங்கப்பட உள்ளது.
அதன்படி, சிறந்த சமூக சேவகருக்கு ரூ. 50,000 ரொக்கம், சான்றிதழும், சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 1,00,000 ரொக்கம், சான்றிதழும் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். தகுதியுடைய விருது பெற விரும்பும் சிறந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக ஜூன் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அதன் கருத்துருவை ஜூன் 30ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628 101 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.