தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த சகோதரா்கள் கைது
தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக அண்ணன், தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகே கஞ்சா வைத்திருந்ததாக அண்ணன், தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வாகைகுளம் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞா்கள் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், இருவரும் தூத்துக்குடி, மாசிலாமணிபுரத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன்கள் சுதாகா் (23), ராஜா (21) என்பதும், அவா்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement