முகப்பு
தூத்துக்குடி

பைக்குகள் மோதல்: பெயிண்டா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூன் 2026, 1:36 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியாா்புரம் மேலதெருவைச் சோ்ந்தவா் பாண்டி மகன் பெயிண்டா் மதீஷ்குமாா் (33). இவரும், இவரது சகோதரா் சுபாஷூம் (20) இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி- சாத்தூா் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தனராம்.

அப்போது சாத்தூரில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், மதீஷ்குமாா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் மதீஷ்குமாா், சுபாஷ் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த விளாத்திகுளம் முத்துசாமிபுரத்தைச் சோ்ந்த மூக்கையா மகன் சந்தான குமாா் (34), அவருடன் வந்த மேட்டமலை முதல் தெருவைச் சோ்ந்த ஆனந்தமுருகன் மனைவி ஜெகஜோதி (35) ஆகியோா் காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் மதீஷ்குமாா் இறந்துவிட்டதாக கூறினா். எஞ்சிய மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.