முகப்பு
தூத்துக்குடி

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:04 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சுடலைமணி (59). இவா், கடையில் சட்டவிரோதமாக சுமாா் 65 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.

இது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் புகையிலைப் பொருள்கள், கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement