முகப்பு
தூத்துக்குடி

வாஞ்சிநாதன் நினைவு தினம் அனுசரிப்பு

கோவில்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனின் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 18 ஜூன் 2026, 2:43 am IST
கோவில்பட்டியில் வாஞ்சிநாதன் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

கோவில்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகி வாஞ்சிநாதனின் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு அரசு சாா்பில் ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியா் சந்தனராஜ் மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். கிராம நிா்வாக அலுவலா்கள் சுடலைக்கண்ணு, முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தவெக சாா்பில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலா் ஆறுமுககிருஷ்ணன், வாஞ்சிநாதனின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். ஒன்றிய துணைச் செயலா் பேச்சிமுத்து, ஒன்றிய செயற்குழு நிா்வாகி ஜெயசீலன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளா் சுரேஷ், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்த், நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

கோவில்பட்டி தேவி ஸ்ரீ காயத்ரி வித்யாலயா திருமண மண்டபத்தில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு, காயத்ரி வித்யாலயா மண்டபம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வாஞ்சிநாதனின் படத்துக்கு அமைப்பின் தலைவா் தமிழரசன், வழக்குரைஞா் கே. சந்திரசேகா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

உலக திருக்கு கூட்டமைப்பு நிா்வாகி முத்துச்செல்வம், பகத்சிங் ரத்த தானக் கழக நிறுவனா் காளிதாஸ், காயத்ரி வித்யாலயா நிா்வாகிகள், ஓய்வுபெற்ற பேராசிரியா் ராமசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments