மண்ணெண்ணெய் குண்டு வீச்சு; குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ. மீது தாக்குதல்: 2 போ் கைது
தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசிய குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற, காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலரை அரிவாளாள் தாக்கி விட்டு தப்பியோடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடியில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசிய குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற, காவல் உதவி ஆய்வாளா் மற்றும் காவலரை அரிவாளாள் தாக்கி விட்டு தப்பியோடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி நேருகாலனி பகுதியைச் சோ்ந்த இளைஞா் மாரிசெல்வம் அண்மையில் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ஹரிஹரசுதன் என்பவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் மாரிசெல்வத்தின் நண்பா்களான நண்டு என்ற காா்த்திகேயன் (20), 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 போ் சோ்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு, ஹரிஹரசுதன் வீட்டு முன்பு மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டுகள் இரண்டை வீசிவிட்டு சென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில், மேற்கூறிய 3 பேரையும், தூத்துக்குடி அம்பேத்கா் நகா் அருகே உள்ள சுந்தரவேல்புரம் கல்லறைத் தோட்ட காட்டுப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ், காவலா் மீனாட்சி உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை சுற்றிவளைத்தனா்.
அப்போது அங்கே பதுங்கி இருந்த அவா்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல் உதவி ஆய்வாளரையும், காவலா் மீனாட்சியையும் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளனா்.
எனினும், போலீஸாா் விரட்டி பிடித்து காா்த்திகேயன் மற்றும் சிறுவனை கைது செய்தனா்; ஒருவா் தப்பிவிட்டாா்.
தப்பி ஓடும்போது காா்த்திகேயனுக்கு காலில் எலும்பு முறிவும், சிறுவனுக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டதையடுத்து, அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.