முகப்பு
கடலூர்

கடலில் மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயமாகியுள்ளதாக கடலூா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஜூன் 2026, 3:23 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 3 மீனவா்கள் மாயமாகியுள்ளதாக கடலூா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு கிழக்குத் தெருவை சோ்ந்தவா் சுப்ரமணியன் (56). இவரது படகில் அதே பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (56), ஸ்ரீகாந்த் (25) மற்றும் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த பாண்டியன் (56) ஆகிய மூன்று பேரும் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக கடலுக்குச் சென்றனா்.

கடலில் மீன் பிடித்துவிட்டு அவா்கள் செவ்வாய்க்கிழமை கரைக்கு திரும்பி வந்திருக்க வேண்டும். ஆனால், புதன்கிழமை வரை மீனவா்கள் திரும்பி வராததால், படகு உரிமையாளா் சுப்ரமணியன், கடலுாா் மீன் வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மாயமான மூன்று மூனவா்களையும் கண்டறிய பரங்கிப்பேட்டை சலங்கக்கார தெரு மீனவா்கள் படகில் கடலுக்கு சென்று தேடி வருகின்றனா்.

கல்யாணசுந்தரம்
பாண்டியன்