தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது
கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளியிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள பண்டாரக்குளம், தெற்கு காலனி தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் தமிழரசன். கட்டடத் தொழிலாளி. இவருக்கும், செண்பகப்பேரியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன் ராமராஜனுக்கும் (32) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பசுவந்தனை சாலையில் நின்றிருந்த தமிழரசனிடம், ராமராஜன் தகராறு செய்து, அவரது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசியை பறித்துச் சென்றாராம்.
Advertisement
Advertisement
புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமராஜனை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.