முகப்பு
தூத்துக்குடி

வீடு புகுந்து நகை திருட்டு: இளைஞா் கைது

Updated On : 28 ஜூன் 2026, 2:43 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தூத்துக்குடியில், ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக் கதவை உடைத்து, தங்க நகைகளைத் திருடிச் சென்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி, காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பாலகணேசன் (36). ஆட்டோ ஓட்டுநா். இவா், சனிக்கிழமை காலையில் ஆட்டோ சவாரிக்கும், அவரது மனைவி உறவினா் வீட்டு விசேஷத்துக்கும் சென்றிருந்தனராம்.

இந்நிலையில் பிற்பகல் பாலகணேசன் வீட்டுக்குத் திரும்பிய நிலையில், அங்கு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், மாப்பிள்ளையூரணி, பூபாண்டியபுரம் காமராஜ் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் இசக்கிமுத்து என்ற யோகீஸ்வரன் (18) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 4.5 பவுன் தங்க நகைகளை மீட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments