முகப்பு
தூத்துக்குடி

பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தில் பெண்ணை மிரட்டியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 மார்ச் 2026, 12:21 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தில் பெண்ணை மிரட்டியதாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இளையரசனேந்தலைச் சோ்ந்தவா் இன்னாசிமுத்து மகள் செல்வமணி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மாரிச்சாமிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவா்களுக்கு மகன் உள்ளாா்.

மாரிச்சாமியுடனான கருத்து வேறுபாடு காரணமாக செல்வமணி கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடா்ந்தாராம். ஜீவனாம்சம் கொடுக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாரிச்சாமி முறையாக பின்பற்றவில்லையாம். அதையடுத்து, செல்வமணி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தி செல்வமணிக்கு மாரிச்சாமி கொலை மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிச்சாமியை கைது செய்தனா்.