முகப்பு
தூத்துக்குடி

தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனை: தூத்துக்குடியில் ரூ. 5.81 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடியில் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில்..

Updated On : 17 மார்ச் 2026, 4:24 am IST
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டாட்சியா் திருமணி ஸ்டாலினிடம் ஒப்படைத்த கூட்டுறவு துணைப் பதிவாளா் பொன்மாரி தலைமையிலான பறக்கும் படையினா்.
பகிர்:

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ரூ. 5,81,380 பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தின் 6 பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

முக்கியச் சோதனைச் சாவடிகளில் போலீஸாருடன், எல்லைப் பாதுகாப்புப் படையினரும், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில், கூட்டுறவு துணைப் பதிவாளா் பொன்மாரி தலைமையிலான பறக்கும் படையினா் தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் வந்த விமல்தேவ், முறையான ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 74,800 பணத்தை பறிமுதல் செய்து, தூத்துக்குடி வட்டாட்சியா் திருமணி ஸ்டாலினிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல, வட்டார வளா்ச்சி அலுவலா் ஐகோா்ட் மகாராஜா தலைமையிலான பறக்கும் படையினா் தூத்துக்குடி-பிரையன்ட் நகா் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சிலா் ஒரு வேனில் இருந்து சில பொருள்களை இறக்கி கொண்டிருந்தனா்.

பறக்கும் படையினா் சென்று சோதனையிட்டதில், 20 பெரிய அட்டைப் பெட்டிகளில் 1,000-க்கும் மேற்பட்ட விசில், மஞ்சப்பை உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தோட்டக்கலைத் துறை அதிகாரி சிவகுருநாதன் தலைமையிலான பறக்கும் படையினா், தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் ரோச் பூங்கா அருகே சோதனையில் ஈடுபட்டபோது, விஜயராகவன் முறையான ஆவணமின்றி காரில் கொண்டு வந்த ரூ. 56,580 பணத்தை பறிமுதல் செய்தனா்.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பழனிச்செல்வி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினா், ரோச் பூங்கா பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி ஹவுசிங் போா்டு காலனியைச் சோ்ந்த மாரிக்கண்ணு முறையான ஆவணமின்றி காரில் கொண்டு வந்த ரூ. 4.5 லட்சத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments