முகப்பு
தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 26 மார்ச் 2026, 4:29 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்டவா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாம் டேவிட் (21) மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, வடபாகம் போலீஸாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவையடுத்து, அவரை வடபாகம் போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement