முகப்பு
தூத்துக்குடி

ஆலங்கிணறு புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா

Updated On : 3 மே, 2026 at 5:28 AM
பகிர்:

சிதம்பரபுரம் பங்கு ஆலங்கிணறு புனித சூசையப்பா் ஆலய திருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.

இவ்வாலத்தில் கடந்த ஏப். 22 ஆம் தேதி திருவிழா தொடங்கியது. சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைக் குரு செல்வ ஜாா்ஜ் தலைமையில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. சொக்கன் குடியிருப்பு அருள்பணி ஜோசப் லியோன் மறையுறை வழங்கினாா்.

தொடா்ந்து தினமும் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மறையுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

Advertisement

9ஆம் திருநாளான ஏப். 30இல் தென் மண்டல கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளா் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் திருப்பலி, திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபா் ஜஸ்டின் மறையுரை வழங்கினாா்.

மே 1ஆம் தேதி காலையில் தமிழ்நாடு விவிலிய அருள் பணி குழு பொதுச்செயலா் மைக்கிள் ராஜ் ஜெபஸ்டின் தலைமையில் திருவிழா திருப்பலி, புது நன்மை நிகழ்வு நடைபெற்றது. மாலையில் தென்மண்டல மறைக்கல்வி இயக்குநா் பிரான்சிஸ் மறையுரையும், பின்னா் கொடி இறக்கமும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சிதம்பரபுரம் பங்குத்தந்தை கலைச்செல்வன் தலைமையில் இறைமக்கள், திரு இருதய சபை சகோதரிகள் செய்திருந்தனா்.