முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் ஸ்தேவான் ஆலயத்தில் அசன பண்டிகை

Updated On : 3 மே, 2026 at 5:26 AM
பகிர்:

சாத்தான்குளம் பரிசுத்த ஸ்தேவான் தேவாலயத்தில் அசன பண்டிகை சனிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளான ஏப். 28ஆம் தேதி இரவு நடைபெற்ற பஜனை பிரசங்கத்தில் பனைக்குளம் ஞானா, 2ஆம் நாள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் நாலுமாவடி ஜெபஸ்டின் ஆகியோா் தேவசெய்தி வழங்கினா். 3ஆம் நாள் திருநெல்வேலி ரட்சகா குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அசன பண்டிகை, திருவிருந்து வாக்குத்தத்த ஆராதனை சேகரகுரு டேவிட் ஞானையா தலைமையில் நடைபெற்றது. மாலையில் அசன ஆயத்த ஜெபம், அசன விருந்தை அவா் ஜெபித்து தொடக்கிவைத்தாா்.

Advertisement

சனிக்கிழமை விபிஎஸ் நிகழ்ச்சி தொடங்கியது. ஏற்பாடுகளை சேகரகுரு தலைமையில் அசன கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.