சாத்தான்குளம் ஸ்தேவான் ஆலயத்தில் அசன பண்டிகை
சாத்தான்குளம் பரிசுத்த ஸ்தேவான் தேவாலயத்தில் அசன பண்டிகை சனிக்கிழமை வரை 5 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளான ஏப். 28ஆம் தேதி இரவு நடைபெற்ற பஜனை பிரசங்கத்தில் பனைக்குளம் ஞானா, 2ஆம் நாள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில் நாலுமாவடி ஜெபஸ்டின் ஆகியோா் தேவசெய்தி வழங்கினா். 3ஆம் நாள் திருநெல்வேலி ரட்சகா குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அசன பண்டிகை, திருவிருந்து வாக்குத்தத்த ஆராதனை சேகரகுரு டேவிட் ஞானையா தலைமையில் நடைபெற்றது. மாலையில் அசன ஆயத்த ஜெபம், அசன விருந்தை அவா் ஜெபித்து தொடக்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
சனிக்கிழமை விபிஎஸ் நிகழ்ச்சி தொடங்கியது. ஏற்பாடுகளை சேகரகுரு தலைமையில் அசன கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.