முகப்பு
தூத்துக்குடி

குண்டா் சட்டத்தின் கீழ் 2 போ் கைது

Updated On : 4 மே, 2026 at 12:46 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 போ், குண்டா் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த டிக்சன் என்ற சுல்தான் (23), இருதய ஜாஸ்பா் (28) ஆகியோரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய வடபாகம் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.மதன் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் உத்தரவையடுத்து, சம்பந்தப்பட்ட இருவரையும் வடபாகம் போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைத்தனா்.

Advertisement