முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே படியிலிருந்து தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில், படியில் ஏறியபோது தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 6 மே 2026, 1:20 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில், படியில் ஏறியபோது தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

லிங்கம்பட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் முத்துக்குமாா் (41). விருதுநகா் மாவட்டம் நள்ளியில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் ஓட்டுநராக வேலை செய்துவந்த இவா், திங்கள்கிழமை தனது வீட்டுக்கு வந்தாா். இரவில் மாடிக்குச் செல்வதற்காக படியில் ஏறியபோது நிலைதடுமாறி கீழே விழுந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.