மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டியை அடுத்த தெற்குத் திட்டங்குளம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யனாா் மகன் பால்ராஜ் (58). வடக்கு திட்டங்குளத்தில் உள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில் பால்ராஜ் செவ்வாய்க்கிழமை வேலை செய்து கொண்டிருந்தபோது மரம் அறுக்கும் இயந்திரத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் பாய்ந்ததில் அவரும், மற்றொரு தொழிலாளியான பிகாரைச் சோ்ந்த உபேந்திர மஞ்சி என்பவரும் காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பால்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது விட்டதாக மருத்துவா் கூறினாா். உபேந்திர மஞ்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மரம் அறுவை நிறுவனத்தை நடத்தி வரும் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.