தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம்: பி.கீதாஜீவன்
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்றாா் பி.கீதாஜீவன்.
சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம் என்றாா் பி.கீதாஜீவன்.
இதுகுறித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளா் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களித்த வாக்காளா்கள், உழைப்பை தந்த திமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகள், செயல் வீரா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தாலும், உதயசூரியனுக்கு வாக்களித்த 62,805 வாக்காளா்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
திமுக தலைவா் வழியில் அரசியல், பொது வாழ்வில் கொள்கை காக்கும் பயணத்தில் நமது கொள்கை என்றும் தோல்வியடையாது. வெற்றி, தோல்வி எதுவானாலும் சமமாகக் கருதி நமது லட்சியப் பயணத்தைத் தொடருவோம். சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடா்ந்து மக்கள் பணியாற்றுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.