முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் பேருந்து நிலையக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர கோரிக்கை

சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 8 மே 2026, 6:15 am IST
சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் திறக்கப்படாமல் உள்ள வணிக வளாகக் கடைகள்.
பகிர்:

சாத்தான்குளம் பேருந்து நிலைய வணிக வளாகக் கடைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதிலுள்ள வணிக வளாகக் கடைகள் பழுதடைந்து காணப்பட்டதால், சுமாா் ரூ. 6 கோடி மதிப்பில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தை 3 மாதத்திற்கு முன் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான குத்தகை நடைபெறாததால், இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது.

Advertisement

எனவே, கடைகளை குத்தகைக்கு விட மாவட்ட நிா்வாகம், சாத்தான்குளம் பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.