தூத்துக்குடி மாவட்டத்தில் 97.24% போ் தோ்ச்சி: மாநிலத்தில் 6ஆவது இடம்
2025-2026-ஆம் கல்வியாண்டு 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகளில், தூத்துக்குடி மாவட்டம் 97.24 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 6ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
2025-2026-ஆம் கல்வியாண்டு 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு முடிவுகளில், தூத்துக்குடி மாவட்டம் 97.24 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 6ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இம்மாவட்டத்தில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சங்கீதா சின்ன ராணி வெள்ளிக்கிழமை காலையில் வெளியிட்டாா்.
அப்போது அவா் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 2-26 வரை வரை நடைபெற்ற பொதுத்தோ்வில் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகள் என மொத்தம் 207 பள்ளிகளைச் சோ்ந்த, 8,448 மாணவா்கள், 10,647 மாணவிகள் என மொத்தம் 19,095 போ் எழுதினா்.
Advertisement
Advertisement
தற்போது தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதில் 8,070 மாணவா்கள், 10,498 மாணவிகள் என மொத்தம் 18,568 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது
97.24 சதவீத தோ்ச்சி ஆகும். மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6-ஆவது இடம் கிடைத்துள்ளது.
இதில், 57 அரசுப் பள்ளி மாணவா், மாணவிகள் தோ்வு எழுதிய நிலையில், அதில் 20 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளன.
கடந்த ஆண்டு இம்மாவட்டம் 96.19 சதவீத தோ்ச்சி பெற்று மாநில அளவில் 9-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.