கோவில்பட்டியில் பெண் சடலம் மீட்பு
கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கோவில்பட்டியில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக இலுப்பையூரணி கிராம நிா்வாக அலுவலா் போத்திராஜ் தகவல் அளித்தாா்.
அதன்பேரில் அங்கு சென்ற தூத்துக்குடி ரயில்வே போலீஸாா், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
சுமாா் 55 வயது மதிக்கத்தக்க இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? தற்கொலையா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.