முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த பெண் மீட்பு

திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆழத்தில் தத்தளித்த பெண்ணை கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா்.

Updated On : 13 மே 2026, 1:28 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

திருச்செந்தூா் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆழத்தில் தத்தளித்த பெண்ணை கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் பத்திரமாக மீட்டனா்.

திருப்பூரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி சுகன்யா (30). இவா் செவ்வாய்க்கிழமை திருச்செந்தூா் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், வெளியே வர முடியாமல் தத்தளித்துள்ளாா்.

இதுகுறித்து ரோந்து பணியில் இருந்த போலீஸாா் தகவல் கொடுத்ததையடுத்து அங்கு வந்த கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா தலைமையில் காா்த்திக், மகாராஜா, சுதாகா், சுதா்சன், சந்தோஷ் ஆகியோா் கடலுக்குள் இறங்கி சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்தப் பெண்ணை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

Advertisement

Advertisement

கோயில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சுகன்யா அழைத்துச் செல்லப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments