கடல் அலையில் சிக்கி மாணவா் மாயம்
கொல்லங்கோடு அருகே ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரையில் குளிக்க சென்ற மாணவா் அலையில் சிக்கி மாயமானாா்.
கொல்லங்கோடு அருகே ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரையில் குளிக்க சென்ற மாணவா் அலையில் சிக்கி மாயமானாா்.
கொல்லங்கோடு அருகே மாா்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் அந்தோணிபிள்ளை மகன் கிறிஸ்டன் (16). இவா் 11 ஆம் வகுப்பு செல்லவிருந்தாா்.
செவ்வாய்க்கிழமை மாலை கொல்லங்கோடு அருகே கேரளத்தின் பொழியூா் பகுதியில் ஆறு கடலில் கலக்கும் பொழிக்கரை பகுதியில் நண்பா்களுடன் குளிக்க சென்ற கிறிஸ்டன், அலையில் சிக்கி மாயமானாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பொழியூா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மீனவா்கள், கடலோர காவல்படை மற்றும் மீட்புப் படை வீரா்கள் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.