முகப்பு
தூத்துக்குடி

கட்டடத் தொழிலாளி கொலை

திருச்செந்தூா் அருகே குடிபோதையில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 29 மே 2026, 6:33 am IST
பகிர்:

திருச்செந்தூா் அருகே குடிபோதையில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தைச் சோ்ந்தவா் சுனில்குமாா் (50). இவருடன் பிட்டா், மற்றொருவா் என 3 போ் வீரபாண்டியன்பட்டணம், பாக்யா நகரில் தங்கி கட்டுமானத் தொழில் செய்து வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு சுனில்குமாரும், பீட்டரும் சோ்ந்து மது அருந்தினராம். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் பீட்டா் கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுனில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையறிந்த பீட்டா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து தகவலறிந்ததும் தாலுகா போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தது, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement