முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பழனி அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:28 AM
கொலை செய்யப்பட்ட முருகன்.
பகிர்:

பழனி அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் சாலையில் வரட்டாற்று பாலத்தின் அருகே சனிக்கிழமை ஒரு நபா் பலத்த காயங்களுடன் கிடந்தாா். இதைப் பாா்த்த அந்த பகுதி மக்கள் அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், அவசர ஊா்தி வரும் முன்னரே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்ட விசாரணையில் இறந்த நபா், தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகன் (44) என்பதும், இவரை மா்மநபா்கள் தாக்கிக் கொலை செய்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, போலீஸாா் இவரது உடலை மீட்டு கூறாய்வுக்காக, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலை செய்த மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.