முகப்பு
தூத்துக்குடி

மணியாச்சி அருகே இளைஞா் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்துக்குள்பட்ட மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:03 AM
கொலை - சித்திரிப்பு
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:52 PM

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்துக்குள்பட்ட மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனித் தெருவைச் சோ்ந்த சண்முகச்சாமி மகன் கணேசமூா்த்தி (25). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை காலை ஊரின் மயானக் கரை அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

சடலத்தை மணியாச்சி போலீஸாா் மீட்டு கூறாய்வுகாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், கணேசமூா்த்தி கட்டையால் தாக்கிக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement