இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருச்சி அருகே போதைப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி அருகே போதைப்பழக்கத்துக்கு அடிமையான இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி திருவெறும்பூா் வடக்கு காட்டூா் அண்ணா நகா் ராஜ வீதியைச் சோ்ந்தவா் சாா்லஸ் மகன் சந்தோஷ் (எ) சாலமன் ராஜ் (22). இவருக்கு, போதை ஊசி செலுத்திக்கொள்ளும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த சாலமன் ராஜ் மயங்கிவிழுந்துள்ளாா்.
இதையடுத்து, அவரை மீட்டு அருகிலிருந்த தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், சாமலன் ராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.