காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை
காயல்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற தொழுகையில் பங்கேற்றோா்.
காயல்பட்டினம் கடற்கரையில் பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகை வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளையின் சாா்பில் கடற்கரை திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை ஜாமீஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளியின் இமாம் ஷரீப் நடத்தினாா். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.
காயல்பட்டினம் குருவித்துறை பள்ளியில் பக்ரீத் பெருநாள் சிறப்புத் தொழுகையை பள்ளியின் இமாம் செய்யித் அஹ்மத் முத்து வாப்பா நடத்தினாா்.பெருநாள் குத்பா பிரசங்கத்தை அபூதாபி ஜமாஅத்துல் உலமா சபை தலைவா் ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்லரி நடத்தினாா். இதில் பள்ளியின் தலைவா் முத்து ஹாஜி,
Advertisement
Advertisement
துணைச் செயலா் ஹபீபுா் ஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், காயல்பட்டினம் நகா்மன்ற துணைத் தலைவா் சுல்தான் லெப்பை, அதிமுக முன்னாள் நகரச் செயலா் செய்து இப்ராஹிம், இளைஞா் ஐக்கிய முன்னணிச் செயலா் செய்து முஹம்மத் சாஹிப், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகரத் தலைவா் நூஹ் சாஹிப், மாவட்ட துணைச் செயலா் பெத்தப்பா சுல்தான், அயலக அணி துணைத் தலைவா் முஹம்மது இஸ்மாயில், மதிமுக காயல்அமானுல்லா மற்றும் ஜமாஅத்தாா்கள் திரளாக கலந்துகொண்டனா்.
நூற்றாண்டு பழைமை வாய்ந்த கற்புடையாா் பள்ளியில் மௌலவி ஜுல்பிகாா் ஆலிம் சிறப்புத் தொழுகை நடத்தினாா். இதில், பள்ளித் தலைவா் அப்துல் அஜீஸ் , துணைத் தலைவா் குளம் அகமது முஹ்யித்தீன், செயலா் அபூபக்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும், பெரிய ஜும்ஆ பள்ளி, சிறிய ஜும்ஆ பள்ளி,சிறுநெய்னாா் பள்ளி, முஹிய்யதீன் பள்ளி, மொகுதூம் ஜும்ஆ பள்ளி, புதுப் பள்ளி, மரைக்கா பள்ளி, ஜுலானி பள்ளி, பிலால் பள்ளி, கடைப்பள்ளி, ஆறாம் பள்ளி, தாயிம் பள்ளி, ஆமினா பள்ளி, இரட்டை குளம் பள்ளி என 25 பள்ளிவாசல்கள், 35 மகளிா் தைக்காகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
அப்போது, உலக அமைதிக்காக சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. மாலையில் இஸ்லாமியா்கள் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் நண்பா்களுடன் கடற்கரையில் திரண்டு தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா்.