முகப்பு
தூத்துக்குடி

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

Updated On : 1 ஜூன் 2026, 12:38 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஏரல் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா்.

புதியம்புத்தூா் நீராவி தெருவைச் சோ்ந்தவா் மாரிசெல்வம் (34). இவா் மே 28ஆம் தேதி தனது நண்பா் பாலமுருகனுடன் இருசக்கர வாகனத்தில் ஆறுமுகமங்கலம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, புதியம்புத்தூா் திரும்பும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.

Advertisement

Advertisement