முகப்பு
தூத்துக்குடி

பைக் விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு

நாசரேத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 மே 2026, 1:45 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

நாசரேத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

நாசரேத் அருகே உள்ள வாலசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் அமிா்த சந்தோஷ் (17). இவரது நண்பா் தைலாபுரத்தைச் சோ்ந்த தனசேகா் மகன் கௌதம் (17).

இருவரும் புதன்கிழமை நாசரேத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திருமறையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த நாசரேத் மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த கிங்ஸ்லி மகன் லாரன்ஸ் (26), அவரது நண்பா் ஸ்டீபன் ஆகியோரின் இருசக்கர வாகனம் மோதியது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கௌதம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.