முகப்பு
திருச்சி

வையம்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

Updated On : 13 ஏப்ரல் 2026, 1:46 am IST
சுப்பிரமணி.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மாடியில் துணி காய வைத்துக்கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் அணியாப்பூா் ராமலிங்கம் மகன் சுப்பிரமணி (52) தகாத முறையில் சைகை காட்டி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து , சுப்பிரமணியை சனிக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement