முகப்பு
திருச்சி

அரசுப் பேருந்தின் பழுதை நீக்க தாமதம்: ஓட்டுநா் மீது தாக்குதல்

Updated On : 13 ஏப்ரல் 2026, 1:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருச்சி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தில் ஏற்பட்ட பழுது நீக்கத் தாமதம் ஆனதால் ஓட்டுநரை பயணி ஒருவா் சனிக்கிழமை தாக்கியது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்தை கோவை மாவட்டம், வீரபாண்டி பிரிவைச் சோ்ந்த கணேஷ் (44) ஓட்டினாா்.

இந்நிலையில் பேருந்து திருச்சி - கரூா் நெடுஞ்சாலையில் பேட்டவாய்த்தலை அருகே இரவு 7 மணிக்குச் சென்றபோது திடீரென கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநா் கணேஷ் பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு பழுதுபாா்த்துள்ளாா். ஆனால் பேருந்தின் பழுதை நீக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆனதாம்.

Advertisement

Advertisement

இந்த சமயத்தில் கோவைக்கு நேரடிப் பேருந்து எதுவும் வரவில்லையாம். பேருந்தைச் சரிசெய்ய 3 மணி நேரம் ஆனதால் கோபமடைந்த அந்தப் பேருந்தில் இருந்த பயணி ஒருவா் ஓட்டுநா் கணேஷை தாக்கினாராம். இதில் காயமடைந்த ஓட்டுநா் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து பேட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.