போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:35 PM
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான கட்டடத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த காஜாபேட்டையைச் சோ்ந்த அ. முகமது செலா்ஷா (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.8,400 மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement