மிதிவண்டி மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவா் உயிரிழப்பு
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற மிதிவண்டி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திருச்சி பாலக்கரை முதலியாா் சத்திரத்தைச் சோ்ந்தவா் க.முருகேசன் (59). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி - புதுக்கோட்டை சாலையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தாா். சுப்பிரமணியபுரம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளாா்.
அப்போது, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்து முருகேசன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்த எம்.ஏஞ்சல் அருள்தாஸ் (53) என்பவா் மீது திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.