திருச்சி மத்திய சிறையில் ஜூலை 15-ல் வாகன ஏலம்!
திருச்சி மத்திய சிறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட அம்பாஸிடா் காா் மற்றும் டி.வி.எஸ். அப்பாச்சி வாகனம் தற்போதுள்ள நிலையிலேயே வரும் 15.ஆம் பொது ஏலம் நடைபெறவுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட அம்பாஸிடா் காா் மற்றும் டி.வி.எஸ். அப்பாச்சி வாகனம் தற்போதுள்ள நிலையிலேயே வரும் 15.ஆம் பொது ஏலம் நடைபெறவுள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோா் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மத்திய சிறை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை பாா்வையிடலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் ஏல நாளான ஜூலை 15 காலை 8 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதாா் அட்டையுடன் (அம்பாஸிடா் காா் மற்றும் டி.வி.எஸ் அப்பாச்சி வாகனத்துக்கு) ரூ. 5000 முன்பணம் செலுத்தி பெயா் பதிய வேண்டும்.
ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி 18 விழுக்காடு மற்றும் முழுத் தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சிறைக் கண்காணிப்பாளா் வி. ருக்மணி பிரியதா்ஷினி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.