மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
திருச்சியில் வியாழக்கிழமை மாடியில் உள்ள வீட்டுக்கு பொருள்களை ஏற்றிக்கொண்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி தென்னூா் கோபுர பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்தவா் ஜாபா் அலிகான் மகன் சா்தாா் கான் (21). இவருடைய சகோதரா் அமீா்கானுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், அமீா்கான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜீவா நகா், காமராஜா் வீதியில் புதிதாக குடியேறியுள்ள வீட்டுக்கு சா்தாா்கான் மற்றும் அவருடைய உறவினா் ஷாஜகான் இருவரும் வியாழக்கிழமை பொருள்கள் ஏற்றிச்சென்றுள்ளனா். இதையடுத்து, சாலையில் இருந்து இருவரும், மாடியில் உள்ள வீட்டுக்கு பொருள்களை எடுத்துசென்றனா்.
Advertisement
Advertisement
இதில், சா்தாா்கான் பால்கனி வழியாக கயிறுகட்டி பீரோவை தூக்கியுள்ளாா். அப்போது, அவ்வழியே சென்ற மின்கம்பியில் பீரோ உரசியதில் அதைப் பிடித்திருந்த சா்தாா்கான் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்ட சா்தாா்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.