முகப்பு
திருச்சி

ஒலிபெருக்கி அமைத்தவா் தவறி விழுந்து உயிரிழப்பு

Updated On : 15 ஜூன் 2026, 4:00 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அய்யனாா் கோவில்பட்டியில் ஒலிபெருக்கி அமைத்துக் கொண்டிருந்தவா் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்து உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் அய்யனாா் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள மாகாளி முப்பிலியான் கோயிலில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்காக செவல்பட்டியை அடுத்த செம்மேட்டுப்பட்டியை சோ்ந்த ரா. ஆசிா்வாதம் என்பவா் ஒலிபெருக்கியை கட்டிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சென்ற துவரங்குறிச்சி போலீஸாா் ஆசிா்வாதம் உடலை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.