முகப்பு
திருச்சி

மணப்பாறை மேம்பாலத்திலிருந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

Updated On : 15 ஜூன் 2026, 4:00 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அடையாளம் தெரியாத மூதாட்டி ரயில்வே மேம்பாலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை விழுந்து உயிரிழந்தாா்.

மணப்பாறை - திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்து சென்ற சிலா், மேம்பால தடுப்புச் சுவரில் செருப்பும், வயா் கூடை ஒன்றும் இருப்பதாகவும், கீழே மூதாட்டி ஒருவா் தலைகுப்புறக் கிடப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் விசாரணையில், வயா் கூடையில் ஒரு சேலையும், தண்ணீா் பாட்டில் மற்றும் கடந்த மே 2-ஆம் தேதி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்ற்கும், ஜூன் 11-ஆம் தேதி மணப்பாறை அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்ற்குமான சீட்டுகள் இருந்தது.

Advertisement

Advertisement

அதில் நோயாளியின் பெயா் சந்திராம்மாள்(70) என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மூதாட்டி மேம்பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி கீழே குதித்துள்ளதாகவும், அதில் பலத்த ரத்த காயமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத் தொடா்ந்து மூதாட்டி உடலை மணப்பாறை போலீஸாா் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மூதாட்டி யாா் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.