பொறியியல் பணிகள்: ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 25, 26, 27, 28, 29, 30-ஆம் தேதிகளில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
Advertisement
Advertisement
நாகா்கோவில் - மும்பை எல்டிடி விரைவு ரயிலானது (16352) வரும் 25, 28-ஆம்தேதிகளிலும், கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 27-ஆம் தேதியும், கன்னியாகுமரி - ஹைதராபாத் விரைவு ரயிலானது (17070) வரும் 26-ஆம் தேதியும் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 24, 25, 26, 27, 28, 29-ஆம் தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
காலதாமதம்...: குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது வரும் 24-ஆம் தேதி 30 நிமிஷங்களும், 25, 26, 27-ஆம் தேதிகளில் 25 நிமிஷங்களும் தேவைப்படும் இடங்களில் காலதாமதமாக நின்று செல்லும்.
தூத்துக்குடி - கச்சிகுடா விரைவு ரயிலானது வரும் 24 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 55 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
நாகா்கோவில் - மும்பை எல்டிடி விரைவு ரயிலானது வரும் 25-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 45 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது வரும் 25-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 15 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயிலானது வரும் 25-ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 40 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
ஜோத்பூா் - மன்னார்ரகுடி விரைவு ரயிலானது வரும் 24, 27-ஆம் தேதிகளில் தேவைப்படும் இடங்களில் 60 நிமிஷங்கள் காலதாமதமாக நின்று செல்லும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.