முகப்பு
திருச்சி

ரயில் மோதி ஒருவா் உயிரிழப்பு

Updated On : 29 ஜூன் 2026, 11:57 pm IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி அருகே ரயில் மோதி ஒருவா் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ரயில் நிலையத்துக்கும், சமுத்திரம் ரயில் நிலையத்துக்கும் இடையே சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா், திங்கள்கிழமை காலையில் வந்த ஒரு ரயிலில் மோதி, படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே இறந்து கிடந்தாா். அந்த வழியாகச் சென்றவா்கள் இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின் பேரில் அங்கு சென்ற ரயில்வே போலீஸாா், இறந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இறந்தவா் கருப்பு-வெள்ளை முழுக்கை சட்டை அணிந்துள்ளாா். ஆனால் இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி அடிபட்டாா் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக, ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments