விமானத்தில் 6 கிலோ கஞ்சா கடத்திய சிவகங்கை பயணி கைது
மலேசியா தலைநகரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கஞ்சா கடத்தி வந்த சிவகங்கையைச் சோ்ந்த பயணியை சுங்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏா் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது பயணி ஒருவா் தனது உடமையில் ஹைட்ரோபோனிக் வகை கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து சுங்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
அதில் அவா், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது அலி (36) என்பதும், தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக 6 கிலோ கஞ்சாவை உடமையில் மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், முகமது அலியை விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது அலியை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.