முகப்பு
திருச்சி

சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது

Updated On : 5 மே 2026, 12:46 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இருவரை மாவட்ட காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க மாவட்ட காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், கல்லக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த கேசவன் என்பவரை கல்லக்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 386 மது பாட்டில்கள், ரூ.5,260 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முத்தரசநல்லூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து ஜீயபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, முத்தரசநல்லூரில் வீட்டுக்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த பாரி என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 168 மது பாட்டில்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments