முகப்பு
திருச்சி

வையம்பட்டி அருகே சாலையைக் கடந்த தொழிலாளி காா் மோதி உயிரிழப்பு

Updated On : 11 மே 2026, 2:07 am IST
வையம்பட்டி அருகே விபத்து நடந்த இடத்தில் ஞாயிற்றுக்கிழமை விசாரணை செய்யும் போலீஸாா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்ற கட்டடத் தொழிலாளி காா் மோதி உயிரிழந்தாா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் சேசலூா் முத்தமடைப்பட்டியை சோ்ந்தவா் துரைக்கண்ணு மகன் சின்னு (53), கட்டடத் தொழிலாளி.

மனைவியை இழந்து தனியாக வாழ்ந்து வந்த இவா், வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை மாலை திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, திண்டுக்கல்லிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வெள்ளை நிற காா் மோதி படுகாயமடைந்தாா்.

Advertisement

இதையடுத்து அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், சின்னு உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.